''கல்லூரிப் படிப்பை வேலைக்கான அளவுகோலாக கருதக்கூடாது,'' என,
பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,)தென்னக இணைச் செயலாளர் ஜி.ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரி ஐ.என்.ஓ., மையத்தை திறந்து, அவர் கூறியதாவது:
கல்லூரியில் கல்வி பெறுவது என்பதை வேலைவாய்ப்புடன் தொடர்பு படுத்தக்கூடாது. சில பாடங்கள் கல்லூரியை முடிக்கும் போதே வேலைவாய்ப்பைத் தரும். வேலை வாய்ப்பைத் தருவது மட்டுமே கல்வி நிறுவனங்களின் பணி அல்ல. கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டவர்கள் கூட பெரிய அளவில் சாதித்துள்ளனர். எனவே, கல்லூரிப் படிப்பை வேலைக்கான அளவுகோலாக கருதக்கூடாது. அதன் மூலம் பெற்ற அறிவை பயன்படுத்த வேண்டும்.
யு.ஜி.சி., வழங்கும் ஆராய்ச்சிக்கான நிதியுதவி, கருத்தரங்கு, பயிற்சி பட்டறைகளில் பங்கேற்பதற்கு சுயநிதி ஆசிரியர்களும் தகுதியானவர்கள் தான். தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் மத்தியில் வரவேற்புள்ள பாடத்திட்டங்களுக்குத் தான் முக்கியத்துவம் தருகின்றன.
கல்லூரியில் நடத்தப்படும் எல்லா பாடத்திட்டங்களுக்கும் சமமான முக்கியத்துவம் தரப்படுகிறது. தொழிற்சாலைகள் தங்களுக்குத் தேவையான திறன் பயிற்சியாளர்களை கல்லூரிகளில் தேடுவதில்லை. கல்லூரிகளுடன் இணைந்து செயல்படாமல், திறன்மிக்க தொழிலாளர்களுக்கான தேவையை, தங்களுக்குள் நிறைவேற்றிக் கொள்கின்றன, என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.