தமிழகத்தில் இன்று தொடங்கும் குரூப் 1 மெயின் தேர்வு எழுத, மாற்றுத்திறனாளி ரமேஷுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று உயர் நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மாற்றுத் திறனாளி ஆர்.ரமேஷ் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு வில், “ஆதிதிராவிடர் வகுப்புச் சேர்ந்த நான் எம்.எஸ்சி பட்டம் பெற்றுள்ளேன். குரூப் 1 முதல் நிலைத் தேர்வில் வெற்றிபெற் றுள்ளேன். மெயின் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளேன். இந்த தேர்வு ஜூன் 5-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நான் மாற்றுத்திறனாளியாக இருப்பதால், உதவியாளர் உதவியுடன்தான் தேர்வு எழுத முடியும். அதனால் மற்றவர் களைப் போல 3 மணி நேரத்தில் தேர்வை எழுதி முடிக்க முடியாது. எனவே, 1993-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதியிட்ட சமூக நலத்துறை அரசாணைப்படி, தனக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு கோரிக்கை மனு கொடுத்தேன். அதற்கு எவ்வித பதிலும் வரவில்லை. எனவே, எனக்கு குரூப் 1 மெயின் தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன் இவ்வழக்கை விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு:-
சமூக நலத்துறை பிறப்பித் துள்ள உத்தரவில், தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது கூடுதலாக 30 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தெரிவிப்பது சரியல்ல. எனவே, அரசாணையில் குறிப் பிட்டுள்ளதுபோல மனுதாரருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று நீதிபதி ஹரிபரந்தாமன் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.