WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 5, 2015

ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு ஜூன் 22-ந் தேதி தரவரிசைப் பட்டியல் கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு ஜூன் 22-ந் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மற்றும் தனியார் பயிற்சி பள்ளிகளில் அரசு ஒதுக்கீடு என இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பில் 15 ஆயிரம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கு 3,300-க்கும் மேற் பட்டவர்கள் விண்ணப்பித் துள்ளனர். அவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூன் 22-ந் தேதி வெளியிடப்பட்டு கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடைபெறும் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார். 

பிரிவு வாரியாக கலந்தாய்வு நாள் விவரம் வருமாறு:- ஜூலை 1-ந் தேதி (புதன்கிழமை) - சிறப்புப் பிரிவினர் (மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பேரன், பேத்தி, முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள். 


ஜூலை 2-ந் தேதி (வியாழக்கிழமை) - ஆங்கில மொழி மற்றும் சிறுபான்மை மொழியில் படிக்க விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவிகள். 


ஜூலை 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - தொழிற்கல்வி பிரிவு மாணவ-மாணவிகள். 


ஜூலை 4 மற்றும் 6-ந் தேதி (சனி, திங்கள்கிழமை) - கலைப்பிரிவு மாணவ-மாணவிகள். 


ஜூலை 7 முதல் 10-ந் தேதி வரை - அறிவியல் பிரிவு மாணவ-மாணவிகள். 

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.