WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 3, 2015

தமிழக பள்ளிகளில் 'எரிசக்தி கிளப்':தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.

தேசிய எரிசக்தி மேலாண்மைக்குழு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, '
எரியாற்றல் சேமிப்பு' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரத்யேக வலைதளம் துவங்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் டிசம்பர், 14ல், ' தேசிய எரிவாயு பாதுகாப்பு தினம்' கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், எரியாற்றல் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன. பள்ளி மாணவர்களுக்கு, இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பிரத்யேக வலைதளம் ' www.enregysavers.co.in' என்ற பெயரில் துவக்கப்பட்டுள்ளது. இதில், எரிசக்தி என்றால் என்ன, அதன் முக்கியத்து வம், எரிசக்கதி பாதுகாப்பு மற்றும் சேமிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும், 1,735 பள்ளிகள் இந்த வலைதளத்தில் ஒருங்கிணைந்துள்ளன. மேலும், தமிழகம் உட்பட, 17 மாநிலங்களில் செயல்படும் பள்ளிகளில், 'எரியாற்றால் கிளப்' துவங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக தொடக்க கல்வித்துறையின் சார்பில், இந்த வலைதளத்தில் மாணவர்கள் உறுப்பினர்களாக அறிவுறுத்தவும், பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்ய வும், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.