WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, August 12, 2015

இடமாறுதல் கவுன்சிலிங் அரசு கண்டிப்பு உத்தரவு.

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில்,
ஜூன் மாதம் முதலே கல்வி ஆண்டு கணக்கில் எடுக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, கடந்த 8ம் தேதி கவுன்சிலிங் நடந்தது. இதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை, கல்வி ஆண்டாக எடுத்துக் கொண்டு, இட மாறுதல் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி, சிலருக்கு இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.தங்களுக்கும் அதேபோல கவுன்சிலிங் நடத்த வேண்டும் என, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர், தமிழக அரசிடம் மனு கொடுத்தனர். சங்க நிர்வாகிகள், பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் சபிதாவை சந்தித்தும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினர்.அப்போது, 'அரசாணையில் உள்ளபடி, ஜூன் மாதமே கணக்கில் எடுக்கப்படும்' என்று, செயலர் சபிதா திட்டவட்டமாக கூறினார் இதேபோல், தொடக்க கல்வியிலும் ஜூன் மாதமே கணக்கில் எடுத்து கலந்தாய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.