WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 16, 2015

540 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பதவி உயர்வு கலந்தாய்வு.

தமிழகம் முழுவதும் உள்ள 540 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான இணையவழி கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இந்தக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆங்கிலம், தமிழ், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர். பட்டதாரி ஆசிரியர்கள் பல இடங்களில் அதிக எண்ணிக்கையில் இருந்ததால், இந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக பணி நிரவல் கலந்தாய்வு மட்டுமே நடைபெற்றது. இப்போது, பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.