கடந்த, 2015ல் நடந்த, குரூப் - 1 தேர்வுக்கான முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.
தமிழக
அரசு துறையில், காலியாக உள்ள துணை கலெக்டர்கள், டி.எஸ்.பி., உதவி வணிகவரித் துறை கமிஷனர், மாவட்ட பதிவாளர்கள் உள்ளிட்ட, 79 காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி.,யின், குரூப் - 1 மெயின் தேர்வு, 2015 ஜூனில் நடந்தது.
இதற்கான முதல்நிலை தேர்வு எழுதிய, 4,282 பேர், குரூப் - 1 மெயின் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். ஆனால், 3,407 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இந்த தேர்வு, சென்னையில் மட்டும், 43 மையங்களில்
நடந்தது. இந்நிலையில் தேர்வு முடிவுகள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, 164 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி
பெற்றுள்ளனர். அவர்களுக்கு, ஜூலை, 4 மற்றும், 5ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்க்கப்படும். பின், நேர்முக தேர்வுக்கான பட்டியல்
வெளியிடப்படும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.