WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, June 21, 2016

'டியூஷன் எடுக்கும் ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது கிடையாது.

அரசு பள்ளி ஆசிரியர்கள், 'டியூஷன்' எடுத்தாலோ, தனியார் பள்ளிகளில் பணிபுரிந்தாலோ, அவர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடையாது என,
அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர் தினமான, செப்., 5ம் தேதி, மாவட்டத்திற்கு, தலா, ஆறு அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு, விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை, மாவட்ட குழு மூலம் தேர்வு செய்து, ஆக., 8ம் தேதிக்குள் அனுப்பி வைக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார். இதில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், கல்வி மாவட்டத்திற்கு, ஆறு ஆசிரியர்களும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், கல்வி மாவட்டத்திற்கு, ஆறு பேரும், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் மண்டலத்திற்கு, ஆறு பேரும் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்வுக்கு, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம்: கடந்த ஆண்டு, செப்., 30ம் தேதிக்கு முன் ஓய்வு பெற்ற ஆசிரியரை தேர்வு செய்யக்கூடாது. முறைகேடு புகார்கள் இருந்தாலோ, ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவராக இருந்தாலோ, அவரது பெயரை சேர்க்க கூடாது. பள்ளிக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் வந்து, நேரம், காலம் பாராது பணியாற்றுபவராக இருக்க வேண்டும். மாணவர்கள் நெஞ்சார நேசிக்கக்கூடிய ஆசிரியராக இருக்க வேண்டும். தனிப்பயிற்சி என்ற, 'டியூஷன்' எடுப்பவராகவோ, கல்வியை வணிக ரீதியாக கருதி, தனியார் பள்ளிகளில் பணிபுரிபவராகவோ, நிர்வாகியாகவோ இருக்க கூடாது. இந்த விதிகளை மீறி, ஆசிரியர்களை தேர்வு செய்யும் அலுவலர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.