Sunday, November 6, 2016
விரைவில் 85 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு.
தமிழகத்தில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது.
85 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விரைவில் வெளியிடப்பட உள்ளது. வெளியிடப்பட உள்ள 85 பணியிடங்களில் 30 துணை ஆட்சியர்கள், 33 பணியிடங்கள் துணை சூப்பிரண்டு, 22 வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பணியிடங்கள்.
தேர்வு முறைகள் முதல் நிலை தேர்வு, மெயின்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்கான எழுத்துத்தேர்வு வரும் 2017 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வரும் 9-ஆம் தேதி வெளியிடும் என்று கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.