பணி நிரந்தரம் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரம் பேர், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
பகுதி நேர ஆசிரிய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகி, ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஐந்து ஆண்டுகளுக்கு முன், அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல், வாழ்க்கை கல்வி, கட்டடக்கலை மற்றும் தோட்டக்கலை உள்ளிட்ட, எட்டு பிரிவுகளில், 16 ஆயிரத்து, 549 பேர் பகுதி நேர பயிற்றுனர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தொகுப்பூதியத்தில், பல ஆண்டுகளாக, இவர்கள் குறைந்த சம்பளம் பெறுகின்றனர். எனவே, பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யக் கோரி, இன்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், உண்ணா விரத போராட்டம் நடக்க உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.