WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, April 2, 2017

ஆய்வக உதவியாளர் தேர்வு பெயர்பட்டியல்கள் வெளியீடு.


பள்ளிகளுக்கான ஆய்வ உதவியாளர் தேர்வில் தேர்ச்சியடைந்தோர் மதிப்பெண் விவரங்களுடன் மதுரையில் 4 இடங்களில் பட்டியல்கள்
சனிக்கிழமை ஒட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் பள்ளி ஆய்வக உதவியாளர்கள் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டு சில நாள்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதனடிப்படையில் தேர்வானவர்களின் சான்று சரிபார்க்கும் பணிகள் வரும் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை மதுரை ஓ.சி.பி.எம்.பள்ளியில் நடைபெறவுள்ளன. இதில் 267 பேருக்கு தற்போது அழைப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சான்று சரிபார்ப்புக்காக வருவோருக்கு மதிப்பெண்களுடனான பெயர்ப்பட்டியல் சனிக்கிழமை காலையில் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், மாவட்டக் கல்வி அலுவலக வளாகங்கள் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக வளாகம் ஆகியவற்றில் ஒட்டப்பட்டன. பெயர்ப் பட்டியல்களை ஏராளமானோர் வந்து பார்த்துச்சென்றனர். ஓ.சி.பி.எம்.பள்ளியில் நடைபெறும் சான்று சரிபார்க்கும் பணியை எளிதில் செயல்படுத்தும் வகையில் ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி, நேர்முக உதவியாளர் ஆதிராமசுப்பு ஆகியோர் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.