WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, April 2, 2017

பள்ளி ஆய்வக உதவியாளர் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு.


பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு, சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு, ஏப்., 9 முதல், 11 வரை
நடக்கிறது.இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான, நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள், மார்ச், 24ல் வெளியிடப்பட்டன. இதன்படி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்டியல், தேர்வர்களின் மதிப்பெண், இனசுழற்சி மற்றும் இதர உள் ஒதுக்கீடுகள் அடிப்படையில், தயார் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மை கல்வி அதிகாரிகளால், ஏப்., 1ல் வெளியிடப்பட்டு உள்ளது. பட்டியலில் உள்ளவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, ஏப்., 9, 10 மற்றும் 11 ஆகிய நாட்களில், மாவட்டங்களில் தனித்தனியே நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்பில் சமர்ப்பிக்கப்படும், அசல் ஆவணங்கள் அடிப்படையில் மட்டுமே, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும். பின், எழுத்துத் தேர்வு, வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில், 'மெரிட்' பட்டியல் தயார் செய்யப்பட்டு, கவுன்சிலிங் மூலம் பணி நியமனம் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இடைத்தேர்தல் காரணமாக, சென்னை மாவட்டத்தில் மட்டும், சான்றிதழ் சரிபார்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.