'நாடு முழுவதும், 24 போலி பல்கலைகள் செயல்படுகின்றன; இப்பல்கலைகள் வழங்கும் சான்றிதழ்களுக்கு எவ்வித அங்கீகாரம் இல்லை' எனக் கூறி, பல்கலை மானியக்குழு பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கல்வியாண்டு துவக்கத்தில், நாடு முழுவதும் செயல்படும் போலி பல்கலைகளின் பெயர்களை, மாணவர்கள் நலன் கருதி, யு.ஜி.சி., வெளியிடுவது வழக்கம். கடந்த கல்வியாண்டில், 22 பல்கலைகளின் பெயர்கள், இப்பட்டியலில் இடம்பெற்றன. நடப்பு கல்வியாண்டில், 24 பல்கலைகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பல்கலையின் பெயரும் இப்பட்டியலில் இடம் பெறவில்லை என்பது மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைவதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். கர்நாடகா, கேரளா, பீஹார், மஹாராஷ்டிரா, புதுச்சேரியில் தலா ஒன்று, மேற்கு வங்கம், ஒடிசாவில் இரண்டு, டில்லியில் ஆறு, உ.பி.,யில் ஒன்பது, என, 24 பல்கலைகள் போலி பல்கலைகளாக நடப்பு கல்வியாண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.