பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழில், மாணவர் பெயரை தமிழில் குறிப்பிடும் நடைமுறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2மதிப்பெண் சான்றிதழில் மாணவர் பெயரை ஆங்கிலம் மற்றும் தமிழில் குறிப்பிடும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. தமிழில் குறிப்பிடும் போது, 'ஷ', 'ஹ' எழுத்துக்களில் இடைவெளி ஏற்படுகிறது;
அதாவது, 'சுதிக்ஷா டி.எஸ்.' என்ற பெயர் 'சுதிக் ஷா டி.எஸ்.' என மாறுகிறது. 'இதேபோல் அசல் சான்றிலும் பெயர் இடம் பெற்றால் குழப்பம் ஏற்படும்' என மாணவர்கள் தவிக்கின்றனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'இப்பிரச்னை குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தோம். எழுத்துரு அமைப்பை மாற்றி குழப்பத்தை தீர்ப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்' என்றனர்.
பெற்றோர் கூறுகையில், 'உயர்கல்வி சேர்க்கைக்காக அலைந்துகொண்டிருக்கும் நேரத்தில் இதுபோன்று குழப்பம் மன உளைச்சலை தருகிறது. அசல் சான்றிதழில் குழப்பத்தை நீக்க வேண்டும்' என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.