WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, September 15, 2017

புதிய தேர்வு மையம் : பள்ளிகளில் விபரம் சேகரிப்பு.


தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கான மையங்கள் அமைப்பதற்காக, அதுகுறித்த விபரங்களை அனுப்பி வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 தேர்வும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுஉள்ளது. கடந்த ஆண்டு வரை, குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை உள்ள பள்ளிகள் மட்டுமே தேர்வு மையங்களாக இருந்தன. குறைவான எண்ணிக்கை உள்ள மாணவர்கள், அருகில் உள்ள வேறு பள்ளி தேர்வு மையத்துடன் இணைக்கப்படுவது வழக்கம். 'நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுவதால், தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்' என, கல்வியமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துஇருந்தார். தற்போது ஒவ்வொரு பள்ளியிலும், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, தேர்வு மையம் உள்ளிட்ட விபரங்களை சேகரித்து அனுப்பி வைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மாணவர்களின் தேர்வு நேர அலைக்கழிப்பை குறைக்கும் வாய்ப்பு உருவாகிஉள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.