அண்ணா பல்கலையின் கல்லுாரிகளில், பகுதி நேர, பி.இ., படிப்புக்கு, வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகளான, கிண்டி இன்ஜி., கல்லுாரி, குரோம்பேட்டை, எஸ்.ஐ.டி., கல்லுாரி ஆகியவற்றில், பி.இ., பகுதி நேர படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
டிப்ளமா படித்து விட்டு, பணியில் இருப்பவர்கள் மட்டுமே, இந்த படிப்பில் சேர முடியும். நடப்பு கல்வி ஆண்டில், பகுதி நேர படிப்பில், மாணவர் சேர்க்கை அறிவிப்பை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், வரும், 30ம் தேதிக்குள், ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்த கூடுதல் தகவல்களை, அண்ணா பல்கலையின், https://www.aukdc.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.