வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நாளை மாலை கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் 7 மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர், கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
கஜா புயல் கரையை கடக்கும் போது கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த காற்றும் கன மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படையின் 2 ஹெலிகாப்டர்கள் மூலமாக கடல் பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இன்று மாலை 5 மணி முதல் தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும் புயல் நகரும் நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால், பாதுகாப்பு நடவடிக்கையாக பாம்பன் பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும் என்று ராமநாதபுரம் ஆட்சியர் வீர ராகவராவ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.