நீட், ஜே.இ.இ ((JEE)) தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மாதிரித் தேர்வுகளை எழுதி பயிற்சி பெறுவதற்காக National Test Abhiyas என்ற செல்போன் செயலியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிமுகம் செய்துள்ளது.
ஊரடங்கால், பயிற்சி மையங்களுக்கு சென்று நுழைவுத்தேர்வுகளுக்கு மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ள இயலாத நிலையில், நுழைவுத்தேர்வுக்கான பயிற்சிகளை வழங்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிமுகம் செய்து வைத்தார்.
அனைத்து வகை செல்போன்கள் மற்றும் கணினியில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக NTA செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. செயலியை பதிவிறக்கம் செய்த பின், அதில் கேட்கப்பட்டுள்ள அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து, தாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் நுழைவுத்தேர்வுக்கான மாதிரி தேர்வுகளை இலவசமாக எழுதி பயிற்சி பெற வேண்டும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.