பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, நாளை மறுநாள் விடைத்தாள் திருத்தம்
துவங்க உள்ளது. பிளஸ் 2வுக்கு மார்ச், 2; 10ம் வகுப்புக்கு, 8ம் தேதியிலும், பொதுத் தேர்வுகள் துவங்கின. பிளஸ் 2வில், 9.33 லட்சம் பேரும், 10ம் வகுப்பில், 10.38 லட்சம் பேரும் தேர்வு எழுதினர்.
பத்தாம் வகுப்புக்கு, நேற்றுடன் தேர்வு முடிந்தது. பிளஸ் 2வில், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியலில் தொழிற்கல்வி உள்ளிட்ட பிரிவுகளுக்கு, தேர்வுகள் முடிந்துவிட்டன. நாளை மறுநாள், மற்ற பிரிவு மாணவர்களுக்கு, இறுதி தேர்வு நடத்தப்படுகிறது. விடைத்தாள் திருத்தம், வரும், 31ல் துவங்குகிறது. முதலில், மொழி பாடங்களுக்கும், ஏப்., 3 முதல் முக்கிய பாடங்களுக்கும் திருத்தம் நடைபெற உள்ளது
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.