WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, April 13, 2021

'ஆன்லைன்' வகுப்பு.

தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி, அனைத்து வகை பள்ளிகளுக்கும், நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாடத் திட்டத்தை பின்பற்றும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் நடக்கின்றன.இந்நிலையில், இன்று தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்படுவதால், அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாளை, தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்படுவதால், தேசிய அளவில், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, நாளை அனைத்து வகை பள்ளிகளிலும் நேரடி மற்றும் 'ஆன்லைன்' வகுப்புகளுக்கு விடுமுறை விட வேண்டும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.