தேனியில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ( ஜாக்டோ) சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தமிழ்நாடு
மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் சரவணக்குமரன் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சந்திரன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில சட்ட ஆலோசகர் மோகன் முன்னிலை வகித்தனர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜா வரவேற்றார்.தீர்மானங்கள்: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, "ஜாக்டோ' அமைப்பு சார்பில் நாளை மாவட்டத்தில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.