Monday, August 28, 2017
தற்காலிக பேராசிரியர் நியமனம் பாரதியார் பல்கலையில் எதிர்ப்பு : * யு.ஜி.சி., விதிமுறை பின்பற்ற வலியுறுத்தல்.
நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வருமா? துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விளக்கம்.
Sunday, August 27, 2017
உபரியாக உள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம்.
Saturday, August 26, 2017
பிளஸ் 1க்கு வினா வங்கி தயாரிப்பு பணிகள் தீவிரம்.
பிளஸ் 1 மாதிரி வினாவில் ’பெரிய’ மாற்றங்கள்.
மேல்நிலைக் கல்வி மாணவர் சேர்க்கையில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு.
ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் தொடக்க கல்வி அலுவலர்கள் உத்தரவு.
வேகமெடுக்கிறது பாடத்திட்ட மாற்றம் ஆசிரியர்களுக்கும் கற்பிக்கப்படும்.
வேகமெடுக்கிறது பாடத்திட்ட மாற்றம் ஆசிரியர்களுக்கும் கற்பிக்கப்படும்.
Friday, August 25, 2017
Big News: பள்ளி கல்வி துறை செயலர் மாற்றம்.
Thursday, August 24, 2017
'செட்' நுழைவு தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு.
'நெட்' தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்.
பிளஸ் 2 துணை தேர்வு செப்., 25ல் துவக்கம்.
Wednesday, August 23, 2017
செட் தேர்வு முடிவில் வெளிப்படை தன்மை மறைக்கபடுவதன் பின்னணி என்ன?
தற்போது அன்னை தெரசா பல்கலை கழகம் தான் நடத்திய செட் தேர்வின் முடிவினை கடந்த வாரம் வெளியிட்டது. தற்போது வெளியிட்ட தேர்வுமுடிவிலும் சென்ற ஆண்டு வெளியான தேர்வு முடிவிலும் வெளிப்படைத்தன்மை கடை பிடிக்காமல் இருப்பது பணம் ( 3 இலட்சம் முதல் 4 இலட்சம் ) கொடுக்கபட்டு தேர்வு முடிவுகள் மாற்றபட்டிருக்க வாய்ப்பு உள்ளது என கல்வியாளர்கள் கருதுகின்றனர். அது மட்டுமல்லாமல் வேலூர் மண்டலத்தில் நிறைய பேர் தேர்ச்சியடைந்துள்ளனர் இதன் உண்மை தன்மையை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என கல்வியாளர்கள் விரும்புகின்றனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: வெறிச்சோடிய அலுவலகங்கள்; கற்றல்-கற்பித்தல் பாதிப்பு.
'நீட்' அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை: செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும்.
ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் கலைத்திட்ட குழு தலைவர் தகவல்.
மாணவர்களுக்கு அழுத்தம் தராத பாடத்திட்டம் தேவை'.
பள்ளிக்கல்வி பாடத்திட்டம், மாணவர்களுக்கு அழுத்தம் தருவதாக இல்லாமல், மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும்' என, மாணவ மாணவியர் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கல்வி புதிய பாடத்திட்ட கருத்தறியும் கூட்டம் சென்னையில், நேற்று நடந்தது.இதில், மாணவ மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர் பேசியதாவது: அன்னரத்னா, சென்னை அகர்வால் வித்யாலயா பள்ளி: பாடங்கள் அதிகமாக உள்ளன; அதை குறைத்து மாணவர்களுக்கு, அழுத்தம் தராத, மகிழ்ச்சியான பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். வெறும் சமன்பாடுகளை மட்டும் கற்றுத் தராமல், செய்முறை பயிற்சி அளித்தால், பாடம் எளிதில் மறக்காது. பாடங்களில் உள்ள வார்த்தைகளை எளிமைப்படுத்த வேண்டும். திறன் வளர்ப்பு, சமயோஜிதமாக சிந்தித்து பதில் அளிக்கும் முறையை மாணவர்கள் பின்பற்ற, ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களை வெறும் புத்தகப்புழுவாக வைத்திருக்காமல், அவர்களை வண்ணத்து பூச்சிகள் போல், விரிவான கல்விக்கு தயாராக்க வேண்டும். யோகலட்சுமி, ராணிப்பேட்டை ராமகிருஷ்ணா பெல் மேல்நிலைப்பள்ளி :சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் உள்ளது போல், தேர்வு முறையையும், கற்பித்தல் முறையையும் மாற்ற வேண்டும். எளிதாக புரியும் வகையில், பாடங்களை வடிவமைக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் வளர்ச்சிக்கேற்ப, இரண்டுஆண்டுகளுக்கு ஒருமுறை, பாடத்திட்டத்தை புதுப்பிக்க வேண்டும். கங்கா, அரசு பள்ளி மாணவி, வேலுார்: அனுபவங்கள் அடிப்படையிலான கல்வி அமைய வேண்டும். ஆங்கில வழியில் மாணவர்கள் சரளமாக பேசவும், எழுதவும் கற்றுத்தர வேண்டும். வங்கி படிவம், ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தான் உள்ளது. அதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்த வேண்டும். மற்றவர்களின் உதவியின்றி, சுயமாக வாழ நம்பிக்கை அளிக்கும் கல்வி தேவை. வில்லியம் விஜயராஜா, முதுநிலை ஆசிரியர், காஞ்சிபுரம்: நவீன தொழில்நுட்பத்தை, பாடத்திட்டத்தில் இடம் பெற வைப்பது அவசியம். வேளாண் கல்வி, பேரிடர் மேலாண்மை, நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் என, பல்வேறு அம்சங்கள் இடம் பெற வேண்டும். நல்லொழுக்கம், தொழிற்கல்வி, உடற்கல்வியை பிரிக்காமல்,கட்டாய பாடமாக சேர்க்க வேண்டும். பரந்தாமன், பெற்றோர் - -ஆசிரியர் கழக தலைவர், செஞ்சி: இயற்கை வளம் குறித்த தகவல்கள், பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும்.ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒரு பாடத் திட்டம் என, தேசிய அளவில் ஒருங்கிணைந்த கல்வியாக ஏற்படுத்த வேண்டும். பிளஸ் 2வுக்கு கருத்தியல் தேர்வு நடத்திய பின், செய்முறை தேர்வு நடத்த வேண்டும். கிருஷ்ணகுமார், ஆசிரியர், திருவள்ளூர்: வினாத்தாள் தயாரிப்பு முறை மாற வேண்டும். தமிழ், ஆங்கில தேர்வில், இரண்டு தாள்களை ஒன்றாக்க வேண்டும். புத்தகங்களில் இல்லாத அம்சங்களை, தேர்வில் இடம் பெற வைத்து, 'கைடு'களை படிக்கும் நிலையை உருவாக்கக் கூடாது. சுகபாலா, இந்திய மாணவர் சங்கம்: பாடங்களில் ஜாதி, மதம், இன உணர்வுகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் கருத்துக்கள் இடம் பெறக்கூடாது. அனைத்து பாடங்களும், விஞ்ஞானம் மற்றும் சரித்திர ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். சுதந்திர போராட்டம் குறித்த தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றில், இடைச்செருகல் இன்றி உண்மையாக இருக்க வேண்டும். இவ்வாறு பலரும் கருத்து தெரிவித்தனர்.
காலாண்டு தேர்வு செப்., 11ல் துவக்கம்.
தமிழ் வழியில் 64 சதவீத இடங்கள் காலி : அண்ணா பல்கலை இன்ஜினியரிங் படிப்பு.
Tuesday, August 22, 2017
அரசு பள்ளிகளில் பாடம் நடத்த தற்காலிக ஆசிரியருக்கு உத்தரவு.
பிளஸ் 2 தேர்வில் மாற்றமில்லை.
Monday, August 21, 2017
அரசு ஊழியர்கள் நாளை 'ஸ்டிரைக்' : அரசு அலுவலகம், பள்ளிகள் முடங்கும் அபாயம்.
Sunday, August 20, 2017
தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு.
Saturday, August 19, 2017
கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் ஒயிட்னருக்கு கட்டுப்பாடு.
ஓய்வூதிய திட்டம் குறித்து மீண்டும் கருத்து கேட்பு.
ஆசிரியர், மாணவர் குறை தீர்க்க கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., அறிவுரை.
ஆக., 22ல், 'ஜாக்டோ - ஜியோ ஸ்டிரைக்' : ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை.
கல்வி உதவித்தொகை பெற இறுதி தேதி அறிவிப்பு.
தலைமை செயலர் மிரட்டல்: அஞ்ச மாட்டோம் : அரசு ஊழியர் சங்க தலைவர் உறுதி.
ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு கட்டாயம் : பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., கண்டிப்பு.
பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற 35 மதிப்பெண்கள் : தமிழக அரசு உத்தரவு.
Friday, August 18, 2017
மீண்டும் புத்துயிர் பெற்ற பள்ளிக்கல்வி புதிய திட்டங்கள்!
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பேராசிரியர்கள் பயிற்சி.
பிளஸ் 1 பொது தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியீடு.
Thursday, August 17, 2017
தமிழகத்தில் நவ., 5ல் தேசிய திறனறி தேர்வு.
டிப்ளமா இன்ஜி., புதிய பாடத்திட்ட விபரம் வெளியீடு.
முறைகேடுக்கு முற்றுப்புள்ளி : ஆன்லைனில் பி.எட்., சேர்க்கை.
முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு.
Wednesday, August 16, 2017
தமிழகத்தில் 'நீட்' தேர்வு அவசர சட்டம் மத்திய அரசு இன்று ஆய்வு.
இன்ஜி., மாணவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 பாடம்
'நீட்' தேர்வு இழுபறி; இப்போதைக்கு முடிவுறாது!
'ஆசிரியர்களின் தரத்தை உயர்த்த தனியாக நிதி ஒதுக்க வேண்டும்' அப்துல்கலாம் விருது பெற்ற தியாகராஜன் வேண்டுகோள்.
பாடத்திட்டம் உருவாக்க செப்., 5ல் கருத்தாய்வு.
Monday, August 14, 2017
யூஜிசி, ஏஐசிடிஐ-யை மாற்றும் முடிவை தள்ளிவைத்தது மத்திய அரசு.
நல்லாசிரியர் விருதுக்கு கட்டுப்பாடுகள்.
748 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் நியமனம்.
பிளஸ் 1ல், 'சென்டம்' வாங்க வாய்ப்பு.
''பிளஸ் 1 தேர்வில், மாணவர்கள் 'சென்டம்' வாங்க வாய்ப்பு உள்ளது,''என, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:வரும் கல்வியாண்டில், மாணவர்களுக்கு மூன்று சீருடை களாக அதிகரித்து வழங்க, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. முதல்வரின் அனுமதியுடன், 1 முதல் 5ம் வகுப்பு; 6 முதல் 10ம் வகுப்பு; பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வரை என, மூன்று வகையிலான சீருடைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பிளஸ் 1 தேர்வை பொறுத்த வரை, மாணவர்களுக்கு சிலசந்தேகங்கள் இருக்கும். இரண்டரை மணி நேரம் தேர்வு எழுவதற்கு ஏற்ப, வினாத்தாள் தயாரித்து இருக்கிறோம். இதற்காக வழங்கப்படும் வினாத்தாள்களை கொண்டு, ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பர். இதன் மூலம் பிளஸ் 1 மாணவர்கள் அனைவருமே, நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வாங்கும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
'நீட்' தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு... ஓராண்டு.
Sunday, August 13, 2017
கலை அறிவியல் கல்லூரிகளில் 250 புதிய பாடப்பிரிவுகள்.
தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க தொழில்நுட்பம்.
Saturday, August 12, 2017
'குரூப் - 1' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு.
பள்ளிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து: பாடத்திட்ட குழு தலைவர் வரவேற்பு.
9, பிளஸ் 1 வகுப்பில் சேர செப்., 30 வரை அனுமதி.
Wednesday, August 9, 2017
3,456 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஐகோர்ட் அனுமதி.
Tuesday, August 8, 2017
பாடத்திட்டம் தயாரிப்பில் புதுமை 'முதல்வன்' பட ஸ்டைலில் பெட்டி.
பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கும் ௨ ஊக்க ஊதிய உயர்வு : பள்ளி கல்வித் துறை உத்தரவு.
கல்லூரிகளை போல் பள்ளிகளுக்கும் தன்னாட்சி அந்தஸ்து : நுழைவுத்தேர்வை சமாளிக்க 'தினமலர்' வெளியீட்டாளர் ஆலோசனை.
Monday, August 7, 2017
ஆசிரியர் பணி நிரவல் மீண்டும் நடத்தப்படுமா?
புதிய பாடத்திட்டம் தயாரிப்பு - 4 இடங்களில் கருத்து கேட்பு.
விருதுக்கு ஆசிரியர்களை தேட உத்தரவு; முறைகேட்டை தடுக்க வலியுறுத்தல்.
Sunday, August 6, 2017
சிறப்பாசிரியர் தேர்வில் அரசாணை மீறல் டி.டி.சி கல்வி தகுதியை புறக்கணிக்கும் டிஆர்பி.
5, 8ஆம் வகுப்புகளுக்கு விரைவில் பொதுத் தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு.
தமிழ் எம்.பில்., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு.
எல்லா பள்ளிகளிலும் தேர்வு மையம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
போலீசார் தடுத்தும் ஆர்ப்பாட்டத்தில் குவிந்த ஆசிரியர், அரசு ஊழியர்கள்.
சென்னை, போலீசார் பல இடங்களில் தடுத்து நிறுத்தியும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் குவிந்தனர்.

